முரளியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தில் நாணய சுழற்சி

இலங்கை மற்றும் இந்திய அணிகளிற்கிடையிலான மூன்று போட்டிகளை கொணட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு குமார சங்கக்காரவும் , இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனியும் தலைமை தாங்குவுள்ளனர். சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு விடை கொடுக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளது.  தொடரின் முதலாவது போட்டியுடன் முரளிதரன் ஓய்வு பெறபோவதாக அறிவித்திருந்தார். இன்று ஆரம்பமாகும் போட்டியின் போது முரளியை கௌரவிக்க அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணய மூலம் நாணய சுழற்சி  நடத்தப்படவுள்ளது. உலக துடுப்பாட்ட ஜாம்பவான்காள  பிரைன் லாரா , சச்சிக் டெண்டுல்கார் , சகீட் அனவர் பேன்றவர்களால் முகங்கொடுக்க முடியாத பந்து வீச்சாளர் என  கூறப்பட்ட முரளிதரன் இதுவரை டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் கூடுதலான விக்கட்டுகளை கைப்பற்றியுள்ள வீரராவார்.  அவர் இதுவரை  792 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 8 விக்கட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராகவும் , ஒரே வீரராhகவும் முரளி மகுடம் சூடவுள்ளார். அவர் அந்த இலக்கை அடைந்து இலங்கைகு பெருமை சேர்க்க வேண்டுமென வசந்தம் வாழ்த்துகிறது.

இலங்கையில் மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு இனி ஆப்பு….

மேல் மாகாணத்தில் மோட்டார் வாகன வருடாந்;த வறுமான கட்டணம் அதிகரிக்கபட்டுள்ளது. இது எதிர்வரும்  திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்; என  மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் உட்பட வாகனங்களின் வறுமான அனுமதி கட்டணம் இதனூடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிலுக்கான  வருடாந்த வறுமான அதிகரிப்பு கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும்,  முற்சக்கர வண்டிகளுக்கு 275 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் , 762 கிலோ கிராமிற்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கு 900 ரூபவாவிலிருந்து 1200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல்  மோட்டார் வாகனங்களுக்கான வறுமான அனுமதி கட்டணம் 2 ஆயரம் ரூபாவிலிருந்து,  2 ஆயிரத்து 200 ரூபாவாகவும்  பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கு இறுக்கை ஒன்றுக்கு 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் , கட்டணங்கள் அதிகரிகப்பட்டுள்ளன. இதேவேளை 400 கிலோ கிராமிற்கு குறைவான பாரமுடைய வேன்களுக்கான கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் எனக்கு 108 , உனக்கு 38

108 வயதான மலேசிய பெண் தனது 38 வயதான கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ இணக்கம் தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் வைத்திய சிகிச்சைகளுக்காக ஒரு வருடம் அவரை பிரிந்திருந்ததாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வைத்திய சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளதையடுத்து இருவரும் இணைந்து வாழ தீர்மானித்தள்ளனர்.  2006 ஆம் ஆண்டு குறித்த பெண் 23 வது கணவராக 38 வயதான நபரை திருமணம் முடித்துள்ளார். ஏனைய 22 பேரையும் அவர் ஏற்கனவே விவாகரத்து செய்திருந்தார். 108 வயதான பெண் தன்னைவிட 70 குறைவான நபருடன் இல்லறம் நடத்தவது ஆசியாவில் புதுமையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இலங்கையில் சிலர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க காரணமே இந்த FACEBOOK தான். இதற்கு தடை விதிக்கப்பட்டால் எமது இளைஞர், யுவதிகள் மற்றும் FACEBOOK இணையத்தள பாவனையாளர்களின் நிலை என்னவாகும். யோசிக்க வேண்டிய விடயம்தான். உண்மையில் எனக்கும் கூட இணையத்தளத்தில் என்ன முன்னேற்ற நிலை வந்துள்ளது? என்ன புதிய வெப்சைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இணையத்தளம் மூலம் என்மை உயர்த்திக் கொள்ளலாம்  என்ற விடயங்களை விட FACEBOOK இணையத்தளத்தில் என்ன புதிய விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு எமது FRIENDS LIST  டை அதிகரித்துக்கொள்ளலாம். எவ்வாறு CHAT பண்ணுவதன் மூலம் எம்மை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி கொள்ளலாம்  போன்ற விடயங்களிற்காக செலவிட்ட நேரம் அதிகம்;. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் நான் ஊடகவியல் கல்லூரியில் கற்று வெளியேறும் போது எனது நண்பியொருவர் எனக்கு AUTOGRAPE புத்தகத்தில் எழுதும் போது FACEBOOK இல் உனது எதிர்காலத்தை தொலைத்து விடாதே நண்பி” என எழுதிய நினைவுகள் தற்போது நினைவிற்கு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில்  FACEBOOK இணையத்தளம் தடை செய்யப்படுமெனில் இணையத்தளத்தை பாவிப்போருக்கு மட்டுமல்லாது மட்டுமல்ல , நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  உலகளவில் பார்த்தால் கூட ஏற்கனவே அதகளவான FANS மூலம் உலகளாவிய ரீதியில் முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது பிள்ளதள்ளப்பட்டு , பிரசித்தி பெற்ற நடிகை ஒருவர்  ஒபாமாவையும் தாண்டிச்செல்லுமு; அளவிற்கு தனது நட்பு வட்டாரங்களை FACEBOOK இணையத்தளம் மூலம் அதிகரித்துக் கொண்டுள்ளமை போள்ற சுவாரஸ்யமான  சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்  FACEBOOK இணையத்தளத்தை தடை செய்யப்பேகின்றார்கள் என்ற தகவலை கேட்டதுமே  நான் அது தொடர்பான தகவல்களை ஆராய ஆரம்பித்துவிட்டேன் ஊடகவியல் துறையில் இருப்பதால் தகவல்களை சேகரிப்பதில் சிரமம் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக இலங்கை தொலைதொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவிடம் வினவியபோது இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என  அவர் தெரிவித்தார். தனக்கு  FACEBOOK இணையத்தளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக, 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு சிலர் இணையத்தளத்திலுள்ள பெண்களின் புகைப்படங்களை  தரவிறக்கம் செய்து அவை உடல் மாற்றம் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்களாக இணையத்தளங்களில் வெளியிடப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், உலகளாவிய ரீதியில், பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட FACEBOOK இணையத்தளத்தை தடை செய்வதன் மூலம், இலங்கையில், இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கை, பெருமளவு குறையுமென்பதால் தான் மாற்று முறையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிசீலிக்க போவதாகவும் தெரிவித்தார். ஒரு சிலரின் செயல்கள் காரணமாக  இலங்கையில் FACEBOOK இணையத்தளத்தை பாவிக்கும் அனைவரும் பாதிக்கப்படவேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். எனவே இனியாவது தவறுகளை செய்பவர்கள் தங்களை திருத்திக்கொள்வதன் மூலம் பலரின் நட்பு வட்டாரங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்கமுடியும்.

இங்கிலாந்து தொடர்ந்தும் வெற்றிப் பாதையில்

இங்கிலாந்து பங்காதேஷ் அணிகளிற்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது, போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நொட்டிங்காம்மில் நடைபெற்றது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இந்து 250 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ரக்;கீப் உல் ஹசன் 76 ஓட்டங்களையும் , ஜுனைட் சித்தீப் 51 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 74 ஓட்டங்களிற்கு 3 விக்கட்டுகளையும் , டிம் பிரெஸ்னன் 40 ஓட்டங்களிற்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். 251 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.1 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இயர்ன் பெல்  ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும் , அணித்தலைவர் என்ரூ ஸ்டோர்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடு;த்தனர். பந்துவீச்சில் சக்கீப் அல் ஹசன் 35 ஓட்;டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்  போட்டியின் ஆட்டநாயகனாக இயர்ன் பெல் தெரிவானார். இவ்வெற்றி மூலம் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிறப்பிலாவது உன் அன்பு நிறந்தரமாய் கிடைக்குமா?

தாயே!
நான் முதன் முதலில்
இவ்வுலகத்தில் சுவாசித்த நறுமணமே – உன் வியர்வைதான்.

நான் இப்ப+வுலகில் மகிழ்ந்து சிரிக்க – நீயழுதாய்
உன் வேதனைகளை பொறுத்து , எனக்கு உயிர் கொடுத்தாய்.

நான் முற்பிறப்பில் மாதவம்தான் புரிந்துள்ளேன் போலும் – தாயே உன் கருவில் நான்  வந்துதிக்க.
ஆயிரம் உறவுகள் என்னருகே இருந்தென்ன?
அன்னையே உன் அன்பிற்கு அவை ஈடாகுமா?

ஒவ்வொரு நாளின் விடியலிலும் உன்னைத் தேடுகிறேன்.
இறுதியில்  தோற்றும் போகிறேன்.
அன்று நீ எனக்காய் கூறிய வார்த்தைகள் புரியவில்லை

இன்று புரிகின்றது. பக்கத்தில் நீயில்லை.
உன்னை என் மனவரையில் வைத்து
ப+ஜிக்க மட்டுமே முடிகிறது

நேரில் யாசிக்க முடியவில்லை.
இறைவன் சித்தம் இதுவெனில் யாரால் மாற்ற முடியும்.

அடுத்த பிறப்பிலாவது உன் அன்பை நான் முலுதாய் பெறவேண்டும்.
இறைவா இதற்காவது சித்தம் செய்வாயா?

சில நாட்களாய் என்னுள் சில மாற்றங்கள்.

வாழ்க்கையில் அனைவருமே ஏதோவொரு முடிவைத்தேடியவாறே ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வழியில் தான் தடைகள் பல. தடைகளைத் தாண்டி வெற்றியை அடைவதென்பது கடினமாக விடயமே. இவ்வாறு தான் நானும் பல்வேறு விதமான இலட்சியங்களுடன் எனக்கு பிரியமான துறையி;ல் ஆசையுடன் கால்பதித்தேன். உடனே குத்தியது பாரிய முள். விலகிச் செல்ல வேண்டும்  என தோன்றினாலும் முடியவில்லை. காரணம் என்னில் நம்பிக்கை வைத்துள்ள சிலரின் மனம் புண்படக்கூடாது என்பதால் எனது ஆசைகள் முடக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. யாருக்கு தெரியும் எல்லோருடைய வாழக்கையிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக அநேகான விடயங்கள் முடக்கப்பட்டும் மறக்கப்பட்டதாகவுமே இருக்கலாம்.
எம்முள் உள்ள திறமைகளை மழுங்கடிப்பதற்காக பல மூதாதையர் கூட்டம் செய்கின்ற செயல்களினால் எம் இள நெஞ்சங்களில் ஏற்படுகின்ற வழிகளை யாரரிவார்? வாழ்வின் முடிவையே தேடிச்செல்வோமா என்று எண்ணங்களுடன் ஒவ்வொரு நாட்களையும் கடத்த வேண்டிய நிலையாகவுள்ளது. ஏதொ பிரிந்து சென்ற நட்புகளை மீள சந்திக்கும் போது மனதில் ஏதோ  ஒரு இனம்புரியாத ப+ரிப்பு. எமக்கென யாரும் இல்லை என நான் எண்ணும் போதெல்லாம் உனக்காக நான் இருக்கிறேன் என சில நாட்களாக ஒரு உறவின் குரல் ஒழித்தவண்ணமுள்ளது. ஆனால் என்னால் தான் அது நட்பா? அல்லது ????????????

என்னுள் சில மாற்றங்கள். காரணம் வெளியில் சொல்ல முடியாதுள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும் , வாழக்கையில் புதிய எண்ணங்களை ஏற்படுத்திவிட்டுள்ளது. எல்லா உறவுகளையும் தாண்டி , வெகு தூரம் வந்து விட்ட எனக்கு யாரும் இல்லை என  எண்ணி அழ நினைக்கும் போதெல்லாம் உனக்காக நான் உள்ளேன். ஏன் கலங்குகிறாய் என ஒரு குரல். ஏற்றுக்கொள்வதா? அல்லது நிராகரிப்பதா? என்பதில் எனக்கே ஒரு சந்தேகம். பல வருடம் நட்பாய், தாயாய் எனக்கு இருந்து தோல்கொடுத்த நீ சில நாட்களாய் மாத்திரம் வார்த்தையி;ல் மாற்றங்களை கொண்டு வந்ததன் அர்த்தம் புரியவில்லை. எனக்குள் பல வேளைகளில் ஏதோவொன்று தோன்றிய போதிலும் சூல்நிலை , அர்த்தமற்றவொன்று , எனது குடும்பம் என பல்வேறு காரணங்களினால் அவற்றை புறக்கணித்து வந்தேன். ஆனால் தற்போது நீயே அதை கூறும்போது இனம்புரியாத இன்பம் ஏற்பட்டபோதிலும் நிலைக்காத ஒன்றுக்காய் ஏன் ப+ரிக்;கிறாய்; என் எனது உள்மனது கோபிக்கிறது. அதுவும் சரிதான் என்னதான் இருந்தாலும் இது எனக்கு எட்டாக்கனிதான் பின் ஏன் நான் ஏங்குகிறேன் என எனக்கே புரியவி;ல்லை.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா

கொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பத்திரிக்கை , செய்தித்துறை டிப்ளோமா பாடநெறிக்கான 2010 ஆம் கல்வியாண்டில் கலைஞர்களையும்,  ஊடகவியலாளர்களையும் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஆகக் குறைந்த கல்வி தகைமையாக க.பொ.த ( சா . த) பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், செய்தித்துறை ஊடகவியலாளர்கள் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் , சிங்கள மொழி மூலம் நடாத்தப்படும் இப்பாடநெறிக்கான விண்ணப்பங்களை மே மாதம் 31 ஆம் திகதி வரை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.

VIVAH ( A JOURNEY – FROM ENGAGEMENT TO MARRAGE)

தமிழ் படங்களில் வரும் சண்டைக்காட்சி , குடும்பத்தகராறு , அயல்வீட்டு பிரச்சினைகள் என தொடர்ந்து ஒரே விதமான படங்களையே பார்த்த சலித்த எனக்கு மிகவும் வித்தியாசமாக முறையி;ல் பார்த்ததுமே கவர வைத்த திரைப்படமே ‘விவாஹ்” ஹிந்தி திரைப்படம்.

மிகவும் எளிமையான குறுகிய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தினை இயக்குனர்  கதையை அனுபவித்து இயக்கியுள்ளார்;.
நாயகி இவரின் பெயர் ப+னாம் இவர் தனது சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்தவர் , தன்னுடைய சித்தப்பாவின் அரவணைப்பில் வாழ்பவர். பாசமும் , அன்பும் , அழகும் நிறைந்த எளிமையான பெண். இடையில் இவருக்கு திருமணம் தொடர்பாக பேச்சு எடுபட ஹீரோ வருகின்றார். இளமையின் துடிப்போடு உலா வரும் ஹீரோவான பிரேம் என்ற புனைப்பெயரைக் கொண்ட ளூயமனை முயிழழச  று;க கதாநாயகியின் புகைப்படத்தை பார்த்த மாத்திரமே பிடித்துப்போகின்றது, வழமையான படத்தை போலவே காதல் காட்சிகளில் அனைவரையும் கவர வைத்திருந்தாலும் பார்ப்பவர்களி;ன கண்களை வேறு திசையில் திரும்ப வைக்காத அளவுக்கு காட்சிக்குள் ஒன்றிப்போகவைத்துள்ளார் இயக்குனர். படத்தின் முக்கால் வாசி வரை சுமூகமான முறையில் நிச்சயதார்த்தம் தொடங்கி திரமணம் வரை காணப்பட்டாலும் இறுதி கட்டம் பார்ப்போரை அழவைக்கும் அளவிற்கு தத்ரூபமாக்கப்பட்டுள்ளது. யாருமே எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் முடிவுகள். காதலி;ன் புனிதத்தை அழகான முறையில் விவரித்திருக்கின்றனர். மீண்டு;ம் மீண்டும் பார்க்க தோன்றவைக்கும் காட்சிகள்.