யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் இன மக்கள் இதுவரை காலமும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இருப்பினும் அம்மக்கள் முகாம்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பலர் பாரா முகமாக இருப்பது ,எம் அரசாட்சியின் அசமந்தப்போக்கினை காட்டுகிறது.
மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தமது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளும் உரிமை இருந்த போதும், இலங்கையில் நடமாடும் சுதந்திரம் என்ற அடிப்படை கோட்பாடு விளையாட்டாகவே கணிக்கப்படுகின்றது.மேலும் இது தொடர்பாக அமெரிக்க சனத்தொகை ,அகதிகள் ,குடிவரவு,பணியகத்தின் உதவி செயலாளர் எரிக் பி.சுவாட்ஸ் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக முகாம்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் ,மக்கள் அதிகளவாக தொற்றுநோய்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.உண்மையில் கூறப்போனால் மக்களை பற்றிய விமர்சனங்களை வழங்குவதற்காகவே வெளிநாட்டு பயணம் என்கிற போக்கில் அண்ணியர்கள் நுழைவது வழமையாகிவிட்டது.
இனி வரும் காலங்களிலாவது மக்களை பற்றிய விமர்சனங்களை தவிர்த்து நிலைமைகளை மாற்றக்கூடிய தலைவர்கள் வருவார்களா என்பது சந்தேகத்துக்குரியதே.